ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புராணங்கள், நாட்டுப்புற கதைகள், தமிழ் நாடகங்கள் சினிமாவாக தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பிரெஞ்சு நாடகம் ஒன்றும் சினிமாவாக தயாரானது. ஆரம்பகால திரைப்பட எழுத்தாளரான கொத்தமங்கலம் சுப்பு ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்தார். இவர் எழுதிய பல நாடகங்களும் திரைப்படமானது. அதில் முக்கியமானது 'தில்லானா மோகனாம்பாள்'.
ஒரு கட்டத்தில் கொத்தமங்கலம் சுப்புவிற்கும் படம் இயக்கும் ஆசை வந்தது. அவர் இயக்கிய முதல் படம்தான் 'கண்ணம்மா என் காதலி'. இந்த படம் 'தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ்' என்ற நாடகத்தை தழுவி உருவானது. யாராவது பிரெஞ்சில் இருந்து திரும்பினால் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி "தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ் பார்த்தீங்களா?" என்பதாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த நாடகம் புகழ்பெற்றிருந்தது.
கண்ணம்மா என் காதலி படத்தில் எம்.கே.ராதா, எம்.எஸ்.சுந்தரிபாய், நடித்திருந்தார்கள். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்தது. எம்.டி.பார்த்சாரதி இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதினார். இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணிநேர படமாக உருவானது. படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் பிரண்டுகள் இல்லை.