யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
அந்த காலத்து படங்கள் 16 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடி வரை எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து பிலிம் ரோல்கள் வருவது குறைந்து விட்டதால் 13 ஆயிரம் அடிக்கு மேல் படம் எடுக்க கூடாது என்று ஆங்கில அரசு சட்டமே போட்டது. நீள நீளமாக படம் எடுத்தவர்கள் 13 ஆயிரம் அடியில் படமெடுக்க திணறினார்கள்.
இந்த காலகட்டத்தில் உருவான படம்தான் 'ஹரிதாஸ்'. தியாகராஜ பாகவதரின் வெற்றி மணிமகுடத்தில் மாணிக்க கல்லாக அமைந்த படம். தீபாவளிகளை தாண்டி ஓடிய படம். இந்த படத்தில் பாகவதர் முதல் பாகத்தில் பெண்களை விரட்டி விரட்டி மயக்கி அனுபவிக்கும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். அவரது மனைவியாக டி.ஆர்.ராஜகுமாரியும், இன்னொரு நாயகியாக டி.என்.வசந்தகோகிலமும் நடித்தார்கள். பாகவதர் மற்றும் வசந்த கோகிலத்தின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
பாகவதரின் ஆஸ்தான எழுத்தாளரான இளங்கோவன் எழுதியிருந்த நாவலை அடிப்படையாக கொண்டு தயாரான படம். பிரபல வங்காள இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்ணி, பிலிம் ரோல்களின் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு அதனை சவாலாக ஏற்று 10 ஆயிரம் அடியில் எடுத்தார். அதாவது இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணி நேரத்தில் காட்சிகளை சுருக்கமாக விறுவிறுப்பாக அவர் தந்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள்.
நீளத்தில் குறைவாக இருந்தாலும் வசூலை வாரிகுவித்த படம். தயாரிப்பு செலவை விட 20 மடங்கு வசூலித்த படம். இந்த படத்திற்கு பிறகுதான் படத்தின் நீளங்கள் குறைந்து இரண்டரை மணி நேரத்திற்குள் படங்கள் உருவாகத் தொடங்கின.