தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சட்டம் ஒரு இருட்டரை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது என தொடர்ந்து ஆக்ஷன் கலந்த சமூக படங்களை இயக்கி கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை அன்றைய மீடியாக்கள் 'மசாலா இயக்குனர்' என்றே குறிப்பிட்டு வந்தது. இதனை மாற்ற விரும்பினார் எஸ்.ஏ,சந்திரசேகர். உணர்வு பூர்வமான ஒரு கதையை கொடுக்க விரும்பினார். அந்த முயற்சியில் அவர் எடுத்த படம்தான் 'இதயம் பேசுகிறது'.
இந்த படத்தின் டைட்டில் கார்டில் முதலில் 'மசாலா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கும்' என்று வரும் பின்னர் ஒரு கை வந்து மசாலா இயக்குனர் என்பதை அழிக்கும். இந்த படத்தில் விஜயராஜ், ரவீந்தர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஷியாம் இசை அமைத்திருந்தார், டி.டி.பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கதையின் நாயகன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். அவனது நண்பன் வீட்டில் தனது மனைவியின் புகைப்படத்தை காண்கிறான். சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. எஸ்.ஏ.சந்திரசேகர் உருகி உருகி இந்த படத்தை எடுத்திருந்தாலும் படம் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் ஆக்ஷன் களத்திற்கே திரும்பி 'பட்டணத்து ராஜாக்கள்' படத்தை விஜயகாந்தை வைத்து எடுத்தார்.