புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சட்டம் ஒரு இருட்டரை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது என தொடர்ந்து ஆக்ஷன் கலந்த சமூக படங்களை இயக்கி கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை அன்றைய மீடியாக்கள் 'மசாலா இயக்குனர்' என்றே குறிப்பிட்டு வந்தது. இதனை மாற்ற விரும்பினார் எஸ்.ஏ,சந்திரசேகர். உணர்வு பூர்வமான ஒரு கதையை கொடுக்க விரும்பினார். அந்த முயற்சியில் அவர் எடுத்த படம்தான் 'இதயம் பேசுகிறது'.
இந்த படத்தின் டைட்டில் கார்டில் முதலில் 'மசாலா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கும்' என்று வரும் பின்னர் ஒரு கை வந்து மசாலா இயக்குனர் என்பதை அழிக்கும். இந்த படத்தில் விஜயராஜ், ரவீந்தர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஷியாம் இசை அமைத்திருந்தார், டி.டி.பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கதையின் நாயகன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். அவனது நண்பன் வீட்டில் தனது மனைவியின் புகைப்படத்தை காண்கிறான். சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. எஸ்.ஏ.சந்திரசேகர் உருகி உருகி இந்த படத்தை எடுத்திருந்தாலும் படம் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் ஆக்ஷன் களத்திற்கே திரும்பி 'பட்டணத்து ராஜாக்கள்' படத்தை விஜயகாந்தை வைத்து எடுத்தார்.