துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடித்த திரிஷா, இசை அமைத்த அனிருத் ஆகிய இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் படம் முடிந்து வெளியில் வந்த அனிருத் தனது காரை எடுக்கச் சென்றபோது அது போக்குவரத்து போலீசாரால் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'கில் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதை கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றார் அனிருத். அனிருத் தாமதமாக படத்திற்கு வந்ததால் தியேட்டர் பார்க்கிங் நிறைந்து விட்டது. அதனால் வெளியில் காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். திரிஷா உள்ளிட்ட மற்றவர்கள் முன்னமே வந்து விட்டதால் அவர்கள் தியேட்டர் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளர்.
நேற்று மட்டும் சென்னையில் 'விடாமுயற்சி' படம் பார்க்க வந்து நோ பார்க்கில் வாகனங்களை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ஆயிரத்துக்கும் மேல் நோ பார்க்கிங் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.