ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று யோகா செய்வார். அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ்.ராஞ்சி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஒரு வாரம் வரை தங்கியிருந்த ரஜினி தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை தற்போது ராஞ்சி ஆசிரமம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினி பேசி இருப்பதாவது: ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு 3 தடவை வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி வருடாவருடம் இங்கு வந்து, சுமார் ஒரு வாரம் தங்குவது என்று முடிவு எடுத்துள்ளேன்.
நான் மிகவும் 'வைப்' ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் ஒரு 'பாசிட்டிவ் வைப்' வருகிறது என்கிறார்கள். அதன் ரகசியமே நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவது தான். 2002ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனாலும் நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், அதாவது 12 வருடங்கள் ஆன பிறகுதான் மாற்றத்தை உணரமுடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி, அமைதி இருந்தது.
கிரியா யோகாவின் சக்தி என்பது, அதை தெரிந்து கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு பரம ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும். நல்ல குருவை நாம் தேடிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களை நாம் விட்டாலும், நம்மை அவர்கள் விட மாட்டார்கள்.
இவ்வாறு ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.