ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. என்றாலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். இதற்காகவே தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தனது வீட்டில் டி-ஷர்ட் அணிந்து தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அந்த டி-ஷர்டில் கனிவுடன் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இன்றைய நாட்களில் கருணை என்பது மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. நான் கருணை மற்றும் அதனுடன் வரும் அனைத்தையும் சேர்த்து தேர்வு செய்கிறேன். நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரு காரில் ஏறுவது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. அதில் விஜய் தேவரகொண்டா விறுவிறு என காரில் ஏறுகிறார்.. அவர் கூடவே நொண்டியபடி வரும் ராஷ்மிகாவுக்கு காரில் ஏறுவதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து பலரும் விஜய் தேவரகொண்டாவை வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஷ்மிகாவின் இந்த பதிவு இருக்கும் என தெரிகிறது.
மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை தழுவி ‛சாவா' என்ற ஹிந்தி படம் உருவாகி உள்ளது. இதில் மகாராணி ஏசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படம் பிப்., 14ல் காதலர் தினத்தில் திரைக்கு வருகிறது. இது தவிர, சிக்கந்தர், குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.