ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தமிழில் ரங்கூன், அமரன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அமரன் படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய முதல் திரைத்துறை சார்ந்த நபர் நீங்கள் தான். அது 2005ல் நடக்கவும் செய்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை நான் தொலைத்துவிட்டேன். அதனை நினைத்து மன வேதனை அடைந்தேன். இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டு படங்களை இயக்கிய பின்னர் இப்போது உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.