கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா | அதிகாலை காட்சிகள் இல்லாமல் வெளியாகும் 'தண்டேல்' | பிளாஷ்பேக்: மதுவின் தீமையை விளக்கிய முதல் படத்தை துவக்கி வைத்த எம்ஜிஆர் |
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை ஸ்டைலிஷான பாணியில் இயக்கி வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்து மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக பல சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்து வந்தார். அப்போது அவர் தனுஷை வைத்து இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்து கேட்டபோது, கிண்டலாக, “எந்த படத்தைப் பற்றி கேட்டீர்கள்? அதில் ஏதோ ஒரு பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அது என் படம் அல்ல.. யாரோ ஒருவர் செய்தது” என்று நகைச்சுவையாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.. அதாவது அந்த படத்தில் தனுஷின் குறுக்கீடு மிகப்பெரிய அளவு இருந்தது என்பது தான் அவர் சொல்ல வந்தது.
இந்த நிலையில் சமீபத்திய இன்னொரு பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறும்போது, “எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் கூறியது சும்மா ஒரு தமாஷுக்காக. என்னுடைய படங்களிலேயே நான் விரும்பியபடி எடுக்க முடியாமல் போன படம் அது மட்டும் தான். கடைசியாக 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை வெறும் ஐந்திலிருந்து 10 நாட்களில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது எனக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான்.. இதுவே வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்து இந்த கருத்தை நான் சொல்லியிருந்தால் அது தவறாக போயிருக்கும். என்னுடைய படம் என்பதால் ஜஸ்ட் லைக் அதை ஒரு ஜாலிக்காக சொன்னேன்” என்று கூறியுள்ளார்.