பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
‛சர்கார், சிவா, ரத்த சரித்திரம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. கடந்த சில வருடங்களாக இவர் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக சினிமாவில் பீ கிரேட் தரம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அது அல்லாமல் பெரும்பாலும் சினிமா துறையில் நடைபெறும் விஷயங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக ராம் கோபால் வர்மா மீண்டும் தரமான படங்களை இயக்கி கம்பேக் தரவேண்டும் என்கிற கனவோடு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ராம் கோபால் வர்மா அடுத்து ஒரு பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.