துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ‛ஆர் ஆர் ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்தபடியாக மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ராவை முதன்மைப்படுத்தி தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சிங்கத்தை வைத்து வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார் ராஜமவுலி. அதில், கென்யாவில் தன்னுடைய அட்வெஞ்சர் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதை தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராஜமவுலி பகிர்ந்தவுடன், அப்படத்தின் நாயகனாக மகேஷ் பாபு, தன்னுடைய போக்கிரி படத்தின் டயலாக் மூலம் ஒரு பதில் கொடுத்து இருந்தார். அதையடுத்து அவரது மனைவி நர்மதா, அந்த வீடியோவிற்கு கிளாப்சிங் எமோஜிகளை வெளியிட்டு இருந்தார். இந்த கிளிப்ஸ் வீடியோ ராஜமவுலியின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகி உள்ளது. விலங்குகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் சிங்கத்துடன் மகேஷ் பாபு சண்டையிடும் காட்சிகளும் இடம்பெறப் போகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கென்யா நாட்டு காடுகளில் நடைபெற உள்ள இந்த படத்திற்கு, எம் .எம். கீரவாணி இசையமைக்க, பி.எஸ். வினோத் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.