துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தெலுங்கு சினிமாவில் பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேற்றிரவே ஆந்திர முதல்வர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு அவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் விருதுகளை வாங்கிய அஜித் மற்றும் ஷோபனாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இங்குள்ள சீனியர் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் அஜித்துக்கும், ஷோபனாவுக்கும் இன்னும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதகளைப் பெற்றவர்களை வாழ்த்துவதில் ஏன் இந்த பாரபட்சம் ?