ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தெலுங்கு சினிமாவில் பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேற்றிரவே ஆந்திர முதல்வர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு அவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் விருதுகளை வாங்கிய அஜித் மற்றும் ஷோபனாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இங்குள்ள சீனியர் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் அஜித்துக்கும், ஷோபனாவுக்கும் இன்னும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதகளைப் பெற்றவர்களை வாழ்த்துவதில் ஏன் இந்த பாரபட்சம் ?