போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
2023 பிப்ரவரியில் காதல் திருமணம் செய்து கொண்ட மலையாள நடிகை அபர்ணா வினோத், இரண்டு வருடம் முடிவதற்குள்ளாகவே தனது விவாகரத்தை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த நண்டுகளுடே நட்டில் ஒரிடவேள என்கிற படத்தில் அறிமுகமாகி, கோகினூர் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழில் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் நாயகி கீர்த்தி சுரேஷின் தோழியாக படத்தின் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்திருந்தார் அபர்ணா வினோத். அதை தொடர்ந்து நடுவன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடந்த 2022-ல் ரினில் ராஜ் என்பவரை தான் காதலிப்பதாக அறிவித்த அபர்ணா வினோத் அப்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ, அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று காதலர் ரினில் ராஜ் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அந்த காதல் திருமணம் முடிவுக்கு வந்து அவர் இப்படி விவாகரத்தை நோக்கி நகர்ந்துள்ளது நிஜமாகவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
இது குறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “தீவிரமான யோசனைக்கு பிறகு தான் என்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளேன். இது ஒன்றும் அவ்வளவு ஈஸியான முடிவு அல்ல என்றாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். என்னுடைய திருமணம் உணர்ச்சிகரமாக முடிவெடுக்கப்பட்டு கடினமான சோதனைகளை கடந்து வந்துள்ளது. இதை இப்போதே முடிவுக்கு கொண்டு வந்து என்னுடைய முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.