ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'அமரன்' படத்திற்கு பிறகு தெலுங்கில் 'தண்டேல்' படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள சாய்பல்லவி, அதையடுத்து ஹிந்தியில் 'ராமாயணா' படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள ஒரு பேட்டியில், ''சிறுவயதாக இருந்தபோது நாங்கள் பெரிய பணக்காரர்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு நாங்கள் வசதியான குடும்பம் அல்ல என்பது அதன்பிறகுதான் தெரியவந்தது. ஆனால் இப்போது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் உள்ளது. இதை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்,'' என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
மேலும், சினிமாவில் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு தொகையை கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதோடு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மேலும், படிக்கிற மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது என பல சமூக பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.