எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
1970, 80களில் பக்தி படங்கள் ஓடிய தியேட்டர்களில் பெண்கள் அருள் வந்து சாமியடியது நடந்தது . பிற்காலத்தில் அதுவே விளம்பரங்களுக்காக செயற்கையாகவும் நடத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக 'என் மனைவி' என்ற படத்தில் இது போன்ற நிகழ்வு நடந்து. இத்தனைக்கும் இந்தப் படம் பக்தி படம் அல்ல. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை கொண்ட காமெடிப் படம்.
இந்த படத்தின் கதை களம் மயிலாப்பூர். மயிலாப்பூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கதை நடப்பதாக உருவாகி இருந்தது. இந்த படம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டாலும் மயிலாப்பூர் பின்னணியை காட்டுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளில் அப்போது கபாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காணப்பட்ட ராஜ கோபுர காட்சியும், கோவில் திருவிழா காட்சியும், கபாலீஸ்வரரின் உற்சவ மூர்த்தியும் அடிக்கடி காட்டப்பட்டது.
இந்த காட்சிகளின் போது ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்காமல் எழுந்து நின்று பார்த்ததோடு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி வணங்கவும் செய்தார்கள். அப்போது இது பரபப்பான செய்தி ஆனது.
இந்தப் படத்தை சுதந்தர் ராவ் நட்கர்னி இயக்கி இருந்தார். கே.சாரங்கபாணி, கே.மகாதேவன், எம்.கே.மீனலோசினி, கே.ஆர்.செல்லம் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1942ல் வெளிவந்தது.