Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலத்தை வென்ற ‛காந்தக்குரல் மன்னர்' ஜெயச்சந்திரன் காலமானார்

09 ஜன, 2025 - 09:08 IST
எழுத்தின் அளவு:
playback-singer-jayachandran-nomore

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார்.

தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் காலமானார்.

குடும்பம்

1944 மார்ச் 3ல் தம்புரான் - சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவி, மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இசை மீது ஆர்வம்
சிறு வயதில் இசை மீதான ஆர்வம் கொண்டு இருந்தார். இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், செண்டா கருவி, மிருதங்கம் வாசிப்பதைக் கற்றுக் கொண்டார்.

பரிசு
செங்கமண்டலத்தில் உள்ள அலுவா செயின்ட் மேரீஸ் உயர்நிலை பள்ளியிலும், இரிஞ்சல்குடா தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும் போதும் பாடல்களை பாடினார். வீடருகே இருந்த தேவாலாயத்திலும் பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.1958 ல் மாநில பள்ளி இளைஞர் திருவிழாவில் நடந்த விழாவில் மிருதங்கம் வாசிப்பதில் முதல் பரிசையும், லைட் மியூசிக்கில் இரண்டாம் பரிசையும் வென்றார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

திரைப்படத்தில் அறிமுகம்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கினார். இதன் பிறகு அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார். தமிழில் பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடல்களை பாடி உள்ளார்.

பெற்ற விருதுகள்
* சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது
* கேரள அரசின் 5 திரைப்பட விருதுகள்
* கேரள அரசின் ஜேசி டேனியல் விருது
* தமிழக அரசின் கலைமாமணி விருது

ஜெயச்சந்திரன் பாடிய மெல்லிசை பாடல்கள்
* வசந்தகால நதியினிலே... (மூன்று முடிச்சு)
* கவிதை அரங்கேறும் நேரம்... (அந்த 7 நாட்கள்)
* காத்திருந்து காத்திருந்து... (வைதேகி காத்திருந்தாள்)
* தாலாட்டுதே வானம்... (கடல்மீன்கள்)
* ஒரு வானவில் போலே... (காற்றினிலே வரும் கீதம்)
* சித்திர செவ்வானம் சிரிக்க... (காற்றினிலே வரும் கீதம்)
* அந்தி நேர தென்றல் காற்று... (இணைந்த கைகள்)
* ஒரு தெய்வம் தந்த பூவே... (கன்னத்தில் முத்தமிட்டாள் )
* கொடியிலே மல்லிகைப்பூ... (கடலோர கவிதைகள் )
* பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து... (அம்மன்கோயில் கிழக்காலே)
* புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல்... (என்புருசன் தான் எனக்கு மட்டும் தான்)
* மீன் கொடி தேரில் மன்மத ராஜன்... (கரும்புவில்)

இது போன்ற பல போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன்! -சொல்கிறார் லோகேஷ் கனகராஜ்அஜித்தை வைத்து விரைவில் படம் ... மத கஜ ராஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மத கஜ ராஜா படத்தில் சிறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

11 ஜன, 2025 - 08:01 Report Abuse
NARAYANAN K May he attain the lotus feet of the lord. Passed away on Vaikunda Ekadashi. Many Great unforgettable Gems in Malayalam and Tamizh.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
10 ஜன, 2025 - 04:01 Report Abuse
தமிழன் சார் இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடலுக்கு அழிவே கிடையாது உங்கள் ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாரட்டும் போய் வாருங்கள் ஓம்சாந்தி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in