பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.சபா (சபாபதி தட்சிணாமூர்த்தி). விஜயகாந்த் நடித்த 'பரதன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த 'எங்க தம்பி', லிவிங்ஸ்டன் நடித்த 'சுந்தர புருஷன்', பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி', நந்தா நடித்த 'புன்னகை பூவே', ஜெய்வர்மா நடித்த 'நாம்', பிரபு நடித்த 'அ ஆ இ ஈ', மதுஷாலினி நடித்த 'பதினாறு' ஆகிய படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'பந்தெம்', கன்னடத்தில் 'ஜாலி பாய்' ஆகிய படங்களை இயக்கினார்.
61 வயதான சபா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.