சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசு விண்ணப்பத்தில் சன்னி லியோன் பெயரும் குறிப்பிட்டு ஆன்லைனில் வங்கி கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களை பெற்று வந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.
சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த சன்னி லியோன் இது குறித்து வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கரில் என் பெயரையும், என் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு பயனளிக்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.