32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தெலுங்கானா மாநிலத்தில் பெரிய படங்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அம்மாநில அரசு அறிவித்தது. பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சுமார் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி அரசு அனுமதி அளித்து வந்தது.
'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக, இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அம்மாநில அரசு அறிவித்தது.
இதை தற்போது தெலுங்கானா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. நேற்று அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து இதை அறிவித்தனர்.
“ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு விதமான டிக்கெட் கட்டணம் என்பது படம் வெளியான முதல் நான்கு நாட்களில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், ரசிகர்கள், சிறிய வேலை செய்பவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. அவர்களால் அதிகக் கட்டணங்களைக் கொடுத்து படங்களைப் பார்க்க முடியாத நிலை இருந்தது. இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
டிக்கெட் கட்டண உயர்வு எல்லா நாட்களிலும் இருக்கிறது என பலர் படங்களைப் பார்க்க வராமல் இருந்தனர். அது திரைப்பட வசூலைப் பாதித்தது. தற்போதைய அறிவிப்பால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள். ஒரே விதமான டிக்கெட் கட்டணம் இருந்தால்தான் மக்களும் படம் பார்க்க வருவார்கள்.
சில தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களுக்கு அதிக செலவாகிவிட்டது என டிக்கெட் கட்டணங்களை உயர்த்த நெருக்கடி கொடுத்தனர். அதனால், தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்து போனது. தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு போலவே ஆந்திர மாநில அரசும் முடிவெடுக்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.