Advertisement

சிறப்புச்செய்திகள்

என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு

23 டிச, 2024 - 03:24 IST
எழுத்தின் அளவு:
Legal-action---Post-published-by-Allu-Arjun

அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுனும் சென்றதால், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அல்லு அர்ஜுன் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்தது. மறுநாளே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நேரத்தில் அல்லு அர்ஜுனின் செயல்பாட்டை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்த நிலையில், தெலுங்கானாவில் எந்த திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நேரத்தில் நேற்று உஸ்மானியா என்ற பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவு போட்டுள்ளார்.

அந்த பதிவில், ‛‛உங்களது உணர்வுகளை எப்போது போன்று பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். அதேசமயம் தவறான கருத்துக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம். முக்கியமாக என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூகவலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டு அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு போலி சமூக வலைதள பதிவுகளுக்கு எனது ரசிகர்கள் யாரும் ஆதரவளிக்க வேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபுஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி ... ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் ஹீரோவின் தலையீட்டால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in