Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு

22 டிச, 2024 - 03:06 IST
எழுத்தின் அளவு:
What-Type-Of-Person...:-Revanth-Reddys-Big-Claim-Against-Allu-Arjun


ஹைதராபாத் : “ஹைதராபாத் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானது குறித்து கூறப்பட்ட போதும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு உடனே வெளியேற மறுத்தார்,” என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி நடிகர்கள் அல்லு அர்ஜுன் நடித்த, 'புஷ்பா - 2 தி ரூல்' என்ற படத்தின் சிறப்பு இரவு காட்சி திரையிடப்பட்டது.

இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக ரேவதி, 35, என்பவர் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனும் வந்தார். அவரை பார்ப்பதற்காக தியேட்டருக்குள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: புஷ்பா படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருவதாகக் கூறி டிச., 2ல் போலீசில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துவிட்டனர். அனுமதி மறுத்த பிறகும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். வரும் போது, காரின் மேற்புறத்தில் உள்ள ஜன்னலை திறந்து, அதன் வழியே நின்றவாறு ரோட் ஷோ நடத்தினார்.

இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவல் தெரிந்தும் தியேட்டரை விட்டு அவர் உடனே வெளியேறவில்லை. போலீசார் அவரை வெளியேற்றினர். இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், ''முதல்வரின் குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. தியேட்டருக்கு செல்லும் போது நான் எந்த ரோட்ஷோவும் நடத்தவில்லை. வாகனத்தில் இருந்தபடி ரசிகர்களை பார்த்து கையை தான் அசைத்தேன்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு வயசே ஆகாது: சரத்குமார்எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! சூர்யா அளித்த உறுதியால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)