இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என ஆந்திர காவல் துறை நேற்று அவரைக் கைது செய்தது. ரிமாண்ட் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் இன்று காலை வெளியில் வந்தார் அல்லு அர்ஜுன்.
வீட்டுக்கு வந்த அவரை அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவருடைய தம்பி அல்லு சிரிஷ், மனைவி சினேகா, மகன், மகள் ஆகியோர் வாசலுக்கே வந்து அவரை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றனர். மேலும் உறவினர்கள் பலரும் அவரை அன்புடன் ஆறுதல் தெரிவித்தனர்.
வீட்டுப் பணியாளர் பெரிய பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார். பின் நிருபர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.