தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என ஆந்திர காவல் துறை நேற்று அவரைக் கைது செய்தது. ரிமாண்ட் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் இன்று காலை வெளியில் வந்தார் அல்லு அர்ஜுன்.
வீட்டுக்கு வந்த அவரை அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவருடைய தம்பி அல்லு சிரிஷ், மனைவி சினேகா, மகன், மகள் ஆகியோர் வாசலுக்கே வந்து அவரை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றனர். மேலும் உறவினர்கள் பலரும் அவரை அன்புடன் ஆறுதல் தெரிவித்தனர்.
வீட்டுப் பணியாளர் பெரிய பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார். பின் நிருபர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.




