Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளியானது 'வீர தீர சூரன்-2' டீசர்

10 டிச, 2024 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Veera-Dheera-Sooran-2-teaser-released


இப்போதெல்லாம் திரைப்படங்கள் சில பாகங்களாக வெளிவருது டிரண்டாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாகம் முதலிலும், முதல் பாகம் பிறகும் வெளிவருவதும் அதிகரித்துள்ளது. 2022ல் வெளியான 'காந்தாரா' படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் முன் பகுதி, 2வது பாகமாக தயாராகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளிவருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மளிகைக்கடை நடத்தி வரும் விக்ரம், பெண் குழந்தையை பாசமுடன் கவனித்துக் கொள்வது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து துஷாரா விஜயனுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெறுகிறது. அடுத்த ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. அது போலீஸ் விசாரணையில் உள்ளது. விக்ரமுடன் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா மோதுகிறார்.

இந்த டீசரின்படி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தும் விக்ரமின் மகளுக்கு ஏதோ நிகழ்கிறது. அதற்காக விக்ரம் பழிவாங்குகிறார். அடுத்து வெளிவரும் முதல் பாகத்தில் விக்ரம், யார்? எங்கிருந்து அந்த ஊருக்கு வந்தார் என்பதாக இருக்கும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட சுஜாதாபிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் ... சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் நிதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)