என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகை சோனா மாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், திடீரென வெளியேறிவிட்டார்.
அதன்பின் பல பிரபலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் ஆஷிகா படுகோனும் வெளியேறுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆஷிகா படுகோனுக்கு சீரியல் குழுவினருடன் எந்தவித பிரச்னையும் இல்லாத போதும் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக சக பிரபலங்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாரி சீரியலின் அடுத்த கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.