2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை ஆந்திர மாநில தலைநகரான அமராவதி நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்குத் திரைப்படங்களுக்கான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல முக்கிய ஊர்களில் நடத்துவது வழக்கம்.
ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி வென்ற பிறகு பெரிய திரைப்பட விழாக்கள் இன்னும் நடக்கவில்லை. தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண் என்பதால் அமராவதியில் விழா நடத்தினால் ஆந்திர ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதோடு பவன் கல்யாணையும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதல்வராகப் பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.