அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை ஆந்திர மாநில தலைநகரான அமராவதி நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்குத் திரைப்படங்களுக்கான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல முக்கிய ஊர்களில் நடத்துவது வழக்கம்.
ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி வென்ற பிறகு பெரிய திரைப்பட விழாக்கள் இன்னும் நடக்கவில்லை. தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண் என்பதால் அமராவதியில் விழா நடத்தினால் ஆந்திர ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதோடு பவன் கல்யாணையும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதல்வராகப் பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.