ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை ஆந்திர மாநில தலைநகரான அமராவதி நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்குத் திரைப்படங்களுக்கான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல முக்கிய ஊர்களில் நடத்துவது வழக்கம்.
ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி வென்ற பிறகு பெரிய திரைப்பட விழாக்கள் இன்னும் நடக்கவில்லை. தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண் என்பதால் அமராவதியில் விழா நடத்தினால் ஆந்திர ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதோடு பவன் கல்யாணையும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதல்வராகப் பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.