எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கருடன் படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகி வருகிறது. பெல்லம்கொண்ட சீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். கருடன் பட வெற்றிக்குப் பிறகு லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் துரை செந்தில் குமார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவரது படத்தை முடித்த பின் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதனை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.