‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது.
மாவீரன் படத்திற்கு பிறகு அஸ்வின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆன கரண் ஜோஹர் தயாரிக்கின்றார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதுதவிர பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பட வாய்ப்பும் வந்துள்ளது. இவற்றில் யாருடைய இயக்கத்தில் விக்ரம் முதலில் நடிப்பார் என இனிமேல் தெரியவரும்.