கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது.
மாவீரன் படத்திற்கு பிறகு அஸ்வின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆன கரண் ஜோஹர் தயாரிக்கின்றார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதுதவிர பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பட வாய்ப்பும் வந்துள்ளது. இவற்றில் யாருடைய இயக்கத்தில் விக்ரம் முதலில் நடிப்பார் என இனிமேல் தெரியவரும்.