அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று |
தியாகராஜ பாகவதர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக வந்தவர் பி.யு.சின்னப்பா. பாடகர், நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு தற்காப்பு கலை வீரர். முதன் முதலில் சண்டை காட்சிகளை வடிவமைத்தவர். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் கோபம் அடைந்து அவ்வப்போது பலரை அடித்த சம்பவங்கள் நிறைய உண்டு. அதில் ஒரு இயக்குனரை துப்பாக்கியால் சுட்ட கதையும் உண்டு.
எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர் தமிழில் படம் இயக்கி கொண்டிருந்தபோது இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு சினிமா பற்றி படித்து இங்கு படம் இயக்கியவர் மும்பையை சேர்ந்த மாணிக் லால் டான்டன். தமிழில் பக்த நந்தனர், பாமா விஜயம் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அடிப்படையில் பெரிய பணக்காரர். பி.யூ சின்னப்பா நாயகான நடிக்க அவர் இயக்கிய படம் 'யாயாத்தி'. இது மகாபாராத யுத்தம் தொடங்குவதற்கு முன்பு வாழ்ந்த ஒரு இளவரசனின் கதை.
இந்த படத்தில் சின்னப்பாவுடன் பி.பி.ரங்காச்சாரி, எம்.வி.ராஜம்மா, சி.எஸ்.ஷாமன்னா, சி.எஸ்.எம்.சுலோச்சனா, டி.எஸ்.கிருஷ்ணவேணி, எம்.எஸ். சுப்ரமணிய பாகவதர், எம்.எஸ்.பாபு, கே.எஸ்.ஹரிஹர ஐயர், எஸ்.சி.கோமதி பாய் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
மோகன் மூவி டோன் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கோல்கட்டாவில் நடந்தது. படத்தில் ஒரு சுடுகாட்டு காட்சி எடுக்கப்பட்டபோது பி.யு.சின்னப்பாவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தீவிரமாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த சின்னப்பா தனது துப்பாக்கியை எடுத்து இயக்குனரை நோக்கி சுட்டார். இதில் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பித்த இயக்குனர் படத்திலிருந்து வெளியேறி விட்டார்.
சின்னப்பாவுக்கு இயக்குனரை கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை. அவரை பயமுறுத்த அவரை சுற்றி சுட்டார் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கியை காட்டி மிரட்டினார் சுடவில்லை என்ற தகவலும் உண்டு.