முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
எண்பதுகளின் இறுதியில் தமிழில் வெளியான பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். மலையாள திரை உலகில் ஒரு விஜயசாந்தி என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்திலும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட வாணி விஸ்வநாத் மலையாள வில்லன் நடிகர் ஆன பாபுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் சினிமாவில் நடிக்காமல் பல வருடம் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வாணி விஸ்வநாத். அந்த வகையில் தற்போது ரைபிள் கிளப், ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இதில் ரைபிள் கிளப் படம் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஒரு மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். அதே சமயம் ஒரு அன்வேசத்தின்டே துவக்கம் படத்தில் ஒரு வில்லத்தனம் வாய்ந்த லேடி தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இது ஒரு புலனாய்வு திரில்லர் ஆக உருவாகிறது.