சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழில் மண்ணுக்குள் வைரம், பூந்தோட்டக் காவல்காரன், தாய்மேல் ஆணை, இதயத் திருடன் உட்பட பல படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளியான இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் வசித்து வரும் இவர்கள் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு கூடாஷா என்ற படத்தை தயாரித்தனர். படத் தயாரிப்புக்காக கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை கடனாக பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கணவன், மனைவி இருவர் மீது ரியாஸ் ஒட்டப்பாலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.