பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வருகிறார். இருவரும் இணைந்து சில படங்களை தயாரித்தார்கள். படம் தயாரிக்க வாங்கிய 3 கோடி ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை என்று ரியாஸ் என்பவர் இவர்கள் மிது ஒட்டப்பாலம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாபுராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு : எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. படத்துக்கும், என் மனைவி வாணி விஸ்வநாத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் எனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுமாறு கோரினர். அந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை. படக்குழுவினருக்கான உணவு மற்றும் தங்குமிடம் எனது ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான பணத்தை படம் வெளியானதும் தருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்து விட்டது. புகாரை சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு பாபுராஜ் விளக்கம் அளித்துள்ளார்.