இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இதனை ஆகாஷ் மனைவி, சினேகாவின் தந்தை பிரிட்டோ தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்குகிறார், யுவன் இசை அமைக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் மூலம் முன்னணி பாலிவுட் நடிகையான கல்கி கோச்லின் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது “நேசிப்பாயா தலைப்புக்கு ஏற்ற மாதிரியே காதல் கதை. 30 சதவிகித கதை சென்னையிலும், 70 சதவிகித கதை போர்ச்சுகல் நாட்டிலும் நடக்கிறது. படத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும். இந்த கேரக்டரை எழுதும்போதே கல்கி கோச்லினை மனதில் வைத்துதான் எழுதினேன். காரணம் அவர் தமிழை ஒரு ஸ்டைலாக பேசுவார், ஆங்கில அறிவும் இருக்கிறது.
ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அவர் நயன்தாராவுக்கு நல்ல தோழி, இதனால் அவர் மூலம் தொடர்பு கொண்டு கதை சொன்னேன். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேரக்டர்தான் படத்தின் திருப்பமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு அவரை இனி அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம்” என்றார்.