தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் |
சூர்யா நடித்திருக்கும் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சூர்யா 44வது படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அந்த வகையில் சூர்யாவின் கங்குவா நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அதையடுத்து நான்கு மாத இடைவெளியில் சூர்யா 44வது படம் வெளியாக உள்ளது.
அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படமும் அடுத்த ஆண்டில் வெளியாகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டில் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கும் படங்களிலும், வாடிவாசல் படத்திலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.