கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன், பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அப்படிப்பட்ட மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் ரஜினி.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படத்தைத் தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய படம் 'பூட்டாத பூட்டுக்கள்'. பஞ்சு அருணாசலம் தயாரித்தார், இளையராஜாவின் இசை அமைத்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தில் ரஜினியும், அப்போதைய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஜெயனும் நடிப்பதாக சொல்லப்பட்டது. விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்து கடைசி நேரத்தில் ரஜினி விலகி கொண்டார்.
அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தமிழகத்தில் ரஜினி போன்று மலையாளத்தில் ஜெயன் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடிக்கும்போது தேவையில்லாத ஒப்பீடுகள் வரும் என்று ரஜினி விலகி கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு காரணம் கதை. கதையின் நாயகன் உப்பிலி பெரிய பயில்வான், கட்டு மஸ்தான உடல்வாகு கொண்டவன். ஆனால் அவனால் ஒரு குழந்தைக்கு தந்தை ஆக முடியாத உடல்நிலை கோளாறு. இதனால் அவன் மனைவி அந்த ஊருக்கு வரும் தியாகு என்ற திருமணமான இளைஞருடன் நெருக்கம் காட்டுவாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. எழுத்தாளர் பொன்னீலனின் நாவலைத்தான் மகேந்திரன் படமாக்கினார். ஆண்மை இல்லாத பலசாலி, அடுத்தவன் மனைவியோடு கள்ளத் தொடர்பு கொள்ளும் ஒருவன் இந்த இரண்டு கேரடக்டருமே தனக்கு செட் ஆகாது என்று கருதியே ரஜினி விலகியதாக கூறப்படுவதுண்டு.
இந்த படத்தில் ஜெயன் 'உப்பிலி' வேடத்தில் நடித்தார். சாருலதா அவரது மனைவியாக நடித்தார். சுந்தர் ராஜ் தியாகுவாக நடித்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.