300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஷோபா தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்த படம் 'சாமந்திப்பூ'. கே.எஸ்.மாதங்கன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருடன் சிவகுமார் நடித்திருந்தார். 80 சதவிகிதம் படம் முடிந்திருந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து நின்றார். படத்தை வெளியிட முடியாது, பண்ணிய செலவெல்லாம் வீண் என்று அவர் கவலைபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவிக்கு வந்தார் எடிட்டர் மோகன் (ஜெயம் ரவியின் தந்தை).
ஷோபாவை போன்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரை லாங் ஷாட்டிலும், முதுகு புறமாகவும் காட்டி படத்தை முடித்தார். அதோடு கதைப்படி ஷோபா தன் காதலர் சிவகுமாருடன் இணைய வேண்டும். ஆனால் அவர் காதல் நிறைவேறாத சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கதையை மாற்றி ஷோபா மரணமடைந்த பிறகு எடுக்கப்பட்ட அவரது நிஜமான இறுதி ஊர்வல காட்சியை படத்தில் இணைத்து வெளியிட்டார்கள். 'இத்திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று விளம்பரமும் செய்தார்கள்.