ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ஷோபா தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்த படம் 'சாமந்திப்பூ'. கே.எஸ்.மாதங்கன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருடன் சிவகுமார் நடித்திருந்தார். 80 சதவிகிதம் படம் முடிந்திருந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து நின்றார். படத்தை வெளியிட முடியாது, பண்ணிய செலவெல்லாம் வீண் என்று அவர் கவலைபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவிக்கு வந்தார் எடிட்டர் மோகன் (ஜெயம் ரவியின் தந்தை).
ஷோபாவை போன்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரை லாங் ஷாட்டிலும், முதுகு புறமாகவும் காட்டி படத்தை முடித்தார். அதோடு கதைப்படி ஷோபா தன் காதலர் சிவகுமாருடன் இணைய வேண்டும். ஆனால் அவர் காதல் நிறைவேறாத சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கதையை மாற்றி ஷோபா மரணமடைந்த பிறகு எடுக்கப்பட்ட அவரது நிஜமான இறுதி ஊர்வல காட்சியை படத்தில் இணைத்து வெளியிட்டார்கள். 'இத்திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று விளம்பரமும் செய்தார்கள்.