லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

ஷோபா தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்த படம் 'சாமந்திப்பூ'. கே.எஸ்.மாதங்கன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருடன் சிவகுமார் நடித்திருந்தார். 80 சதவிகிதம் படம் முடிந்திருந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து நின்றார். படத்தை வெளியிட முடியாது, பண்ணிய செலவெல்லாம் வீண் என்று அவர் கவலைபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவிக்கு வந்தார் எடிட்டர் மோகன் (ஜெயம் ரவியின் தந்தை).
ஷோபாவை போன்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரை லாங் ஷாட்டிலும், முதுகு புறமாகவும் காட்டி படத்தை முடித்தார். அதோடு கதைப்படி ஷோபா தன் காதலர் சிவகுமாருடன் இணைய வேண்டும். ஆனால் அவர் காதல் நிறைவேறாத சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கதையை மாற்றி ஷோபா மரணமடைந்த பிறகு எடுக்கப்பட்ட அவரது நிஜமான இறுதி ஊர்வல காட்சியை படத்தில் இணைத்து வெளியிட்டார்கள். 'இத்திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று விளம்பரமும் செய்தார்கள்.