அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மறுபுறம் ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தினை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.