என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் என புதுமையாக செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் பெரும்பாலான படங்களில் ஒரு முக்கிய காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
குறிப்பாக ஜிகர் தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களில் சிங்கிள் டேக்கில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கினார். தற்போது இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தினை இயக்கியுள்ளார். இதில் 15 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியுள்ளனர். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் செய்துள்ளனர்.