ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும் தாண்டி தன் தந்தையை போலவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ள துல்கர் சல்மான் ஒவ்வொரு மொழியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த கிங் ஆப் கொத்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் துல்கர் சல்மான்.
அவர் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. இது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதனால் இந்த இடைவெளி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
“படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல் நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன். இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.