‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சமீப காலமாக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் தான் வாங்கிய வீட்டில் குடியேறி இருக்கும் நயன்தாரா, அங்கு ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் பழங்கால பொருட்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகை பூச்சூடி, மங்களகரமாக இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நயன்தாரா. அவர் அணிந்துள்ள இந்த புடவையை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனு என்பவர் தான் வடிவமைத்திருக்கிறார்.
அவர் நடத்திவரும் கைத்தறி ஆடை விற்பனை நிலையத்துக்கு புரமோஷன் செய்யவே இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் தற்போது மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன்-2 படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.