அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தனுஷ், நித்யா மேனன் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்ததற்காக நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகளில் சிறந்த நடன இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடனப் பெண் ஒருவர் ஜானி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசிய விருதை வாங்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கேட்டிருந்தார் ஜானி. அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
போக்சோவில் கைதான ஜானி, இடைக்கால ஜாமின் பெற்று தேசிய விருது வாங்கப் போவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தேசிய விருதுகளின் பெருமையைக் குலைப்பதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு வழங்க இருந்த தேசிய விருதை மறுஉத்தரவு வரும் வரையில் ரத்து செய்வதாக தேசிய திரைப்பட விருதுகள் குழுமம் அறிவித்துள்ளது.
டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு ஜானிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கான கடித நகல் சிறையில் உள்ள ஜானிக்கு சிறை கண்காளிப்பாளர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், தேசிய வருது வாங்குவதற்காக ஜானிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.