பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு ஒரு குழுவாக சுற்றுலா செல்லும் கேரள இளைஞர்களில் ஒருவர் அங்குள்ள குணா குகையில் தவறி விழுந்துவிட அவரை காப்பாற்ற மற்றவர்கள் எடுக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. அது மட்டுமல்ல பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வரும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ள ஒரே திரைப்படம் இதுதான். இந்த படம் திரையிட்டு முடித்த பிறகு படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் கண் கலங்கினார்கள் என்றும் அதற்கு பிறகு நடந்த கேள்வி பதில் பகுதியில் படத்தின் மேக்கிங் குறித்தும் அந்த குகை உருவாக்கம் குறித்தும் நிறைய கேள்விகளை கேட்டனர் என்றும் அங்கிருந்தபடியே தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.