ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
2022ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான 70வது தேசி திரைப்பட விருதுகளை வென்றவர்களைப் பற்றிய அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக வென்றனர்.
அதில் நடன இயக்குனர் ஜானி, நடனப் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருதை வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
70வது தேசிய விருதுகள் டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. போக்சோவில் கைதாகி விருதைப் பெறுவதற்காகவே இடைக்கால ஜாமீனில் வர உள்ள ஜானி, தேசிய விருதைப் பெறுவது சரியா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய விருதுகள் குழு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பலரும் காத்திருக்கின்றனர்.