10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
பொதுவாக ரஜினியின் கால்ஷீட்டுக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் காத்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் பஹத் பாசிலுக்காக காத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 45 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டையன் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் கூறியிருப்பதாவது: கதையை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பஹத் பாசில்தான் என்று முடிவு செய்து விட்டேன். ரஜினி முதல் தயாரிப்பு நிறுவனம் லைகா வரை படப்பிடிப்பு ரெடி. கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்ட பஹத் பாசிலால் வரமுடியவில்லை. அப்போது அவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கேரக்டரை பஹத்தை வைத்துதான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னதும் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு பஹத் வந்தார், படப்பிடிப்பு தொடர்ந்தது.
பஹத் மற்ற நடிகர்களைவிடக் குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ரொம்ப பிஸியான நடிகர். ஆனால் தினமும் நடிக்கிறவர் இல்லை. அவருக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். அவர் கூட வேலை பார்த்ததில் அது நன்றாகப் புரிந்தது. பட வெளியீட்டுக்கு பிறகு அவரது கேரக்டர் பேசப்படும். இவ்வாறு கூறியிருக்கிறார் ஞானவேல்.