மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் |
பொதுவாக ரஜினியின் கால்ஷீட்டுக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் காத்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் பஹத் பாசிலுக்காக காத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 45 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டையன் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் கூறியிருப்பதாவது: கதையை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பஹத் பாசில்தான் என்று முடிவு செய்து விட்டேன். ரஜினி முதல் தயாரிப்பு நிறுவனம் லைகா வரை படப்பிடிப்பு ரெடி. கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்ட பஹத் பாசிலால் வரமுடியவில்லை. அப்போது அவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கேரக்டரை பஹத்தை வைத்துதான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னதும் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு பஹத் வந்தார், படப்பிடிப்பு தொடர்ந்தது.
பஹத் மற்ற நடிகர்களைவிடக் குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ரொம்ப பிஸியான நடிகர். ஆனால் தினமும் நடிக்கிறவர் இல்லை. அவருக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். அவர் கூட வேலை பார்த்ததில் அது நன்றாகப் புரிந்தது. பட வெளியீட்டுக்கு பிறகு அவரது கேரக்டர் பேசப்படும். இவ்வாறு கூறியிருக்கிறார் ஞானவேல்.