ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனர் கனல் கண்ணன். தீவிர தெய்வ பக்தி கொண்ட இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பு நடத்திய் இந்து உரிமை பிரசார பயண நிறைவு விழாவில் கலந்து கொண்ட பேசியபோது, 'ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.
அவரின் இந்த பேச்சு குறித்து த.பெ.தி.க மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில், கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி' என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சிலையை போலீசார் அகற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கனல் கண்ணன் மனுவை ஏற்றுக் கொண்டு, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.