தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஜானி. சிறந்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெறப்போகிறவர். இவர் மீது இவரது 21 வயது பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொரடப்பட்டது. ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜானி தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி ரங்கா ரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டில்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுபெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஜானிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 6ம் தேதியில் இருந்து 10ந்தேதிவரை ஜானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வருகிற 8ந்தேதி டெல்லியில் ஜானி சிறந்த நடன இயக்குனர் விருது பெற இருக்கிறார் ஜானி. தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவதற்காகவே அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.




