பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. தங்களது மகன்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்த அவர்கள் தொடர்ந்து அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் தங்களது மகன்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டு உள்ளார் விக்னேஷ் சிவன். அந்த பதிவில், ‛‛உங்களுக்கு உயிர், உலகம் என்று பெயரிட்டதே நீங்கள் இருவரும் என்னுடைய உயிரும் உலகமுமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் மீது நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். உங்களது இரண்டாவது பிறந்தநாளில் இன்றைய தினம் அப்பா அம்மா மட்டுமின்றி மொத்த குடும்பமும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது. கடவுளின் எல்லா அருளும் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பேரோடும், என்னுடைய உயிர் உலகமுமாகிய உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்று அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.