பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தவர், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே பாப் பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவியை தொடர்புபடுத்தி செய்திகள் வர தொடங்கின. தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். வரும் தீபாவளி வெளியீடாக அக்., 31ல் படம் ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயம் ரவி பேசினார். பிரதர் படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். உறவுகளை பற்றி பேசும் படம். குறிப்பாக அக்கா - தம்பி இடையேயான பாசத்தை சொல்கிற படம். மக்காமிஸி பாடலுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த பாடலுக்கு என் கால் உடைந்து விடும் அளவுக்கு ஆட விட்டுவிட்டார். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பற்றியும் மனம் திறந்தார். அவர் கூறுகையில், ‛‛விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் குடும்பத்தில் சில பிரச்னைகள் எழுந்தன. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதை சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பிரியும் முடிவை எடுத்துவிட்டேன் அவருக்கு(மானைவி ஆர்த்தி) நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அவுங்க அப்பாவும் வந்து பேசினார். அப்படி இருக்கையில் விவாகரத்து பற்றி அவருக்கு தெரியாது என எதற்காக சொன்னார் என தெரியவில்லை.
விவாகரத்து விஷயம் வருத்தம் தான் என்றாலும் அது என் சினிமா வாழ்க்கையை பாதிக்காது. அப்பா, அம்மா நான் நல்லா இருக்கணும் தான் நினைக்கிறாங்க. என் முடிவை ஏற்றுக் கொண்டார்கள். என் மகன்கள் என்னோடு தான் இருக்கிறார்கள். என் மூத்த பையனிடம் நாங்க பிரிவது பற்றி புரியும்படி பேசியிருக்கிறேன். அவர் ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார். உண்மை ஒருநாள் கோர்ட் மூலம் வெளிவரும். இந்த கார், வீடு எல்லாமே நான் உழைத்து, ரத்தம் சிந்தி சிம்பாதித்தது. சோறு போடும் ரசிகர்களுக்கு முடிந்தவரை நான் உண்மையாக இருக்கிறேன என்றார்.
பாடகி கெனிஷா பற்றி கூறுகையில், அந்த பொண்ணு பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கு அப்பா, அம்மா கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு. நடிகர் ஜீவா ஒரு ஆல்பம் பண்ணினார். அந்த ஆல்பம் விழாவில் தான் அவர் எனக்கு பழக்கம் ஆனார். பாடகி தாண்டி அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். உளவியல் ரீதியாக தனது பேச்சுமூலம் நிறைய பேரை குணப்படுத்தி உள்ளார். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க, அந்த பெண்ணை பற்றி மட்டும் அவதூறாக பேசாதீங்க.
நான் வீட்டை விட்டு போனது உண்மைதான். எனது காரை எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல்தான் சென்றேன். . ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசினர். அவருக்கு நிச்சயமாகி போய் விட்டார். அதற்குள் என் மீது சேற்றை வாரி இறைக்க சிலர் நினைக்கிறார்கள். அதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. காரணம், என்னைப் பற்றி, எனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.