ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாரத் ரத்னா விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது என்றும், அதில் வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றத்தில் நடத்தி உள்ள போட்டோ ஷூட் பரபரப்பை கிளப்பி உள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். இது குறித்து வித்யா பாலன் கூறும்போது, “என் அம்மா காலையில் முதலில் பாடும் சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது. அவருடைய குரலில்தான் எனது பொழுதுவிடியும். என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு ஆன்மிக அனுபவம். எனவே, இது அன்பின் உழைப்பு, இந்த வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்”. என்கிறார்.
இந்த முயற்சிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்தி சிக்கில் மாலா உதவி உள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்த இடத்தில் அவர் அணியும் பட்டுப்புடவைகள், நகைகளை கொண்டு இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.