ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜானி மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானியின் மனைவியும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம். இதனால், அவர் மீது வழக்கு பாயலாம் என்கிறார்கள்.
போலீஸ் தற்போது நடத்தி வரும் விசாரணையின் முடிவுக்குப் பிறகுதான் அவர்கள் ஜானி மாஸ்டரைக் கைது செய்வார்களா இல்லையா என்பது தெரிய வரும். ஆளும் அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதால் அரசியல் அழுத்தம் இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.




