என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜானி மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானியின் மனைவியும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம். இதனால், அவர் மீது வழக்கு பாயலாம் என்கிறார்கள்.
போலீஸ் தற்போது நடத்தி வரும் விசாரணையின் முடிவுக்குப் பிறகுதான் அவர்கள் ஜானி மாஸ்டரைக் கைது செய்வார்களா இல்லையா என்பது தெரிய வரும். ஆளும் அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதால் அரசியல் அழுத்தம் இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.