என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜானி மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானியின் மனைவியும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம். இதனால், அவர் மீது வழக்கு பாயலாம் என்கிறார்கள்.
போலீஸ் தற்போது நடத்தி வரும் விசாரணையின் முடிவுக்குப் பிறகுதான் அவர்கள் ஜானி மாஸ்டரைக் கைது செய்வார்களா இல்லையா என்பது தெரிய வரும். ஆளும் அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதால் அரசியல் அழுத்தம் இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.