தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! |
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படம் 'வணங்கான்'. இத்தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறி ஆரஞ்ச் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ் காமாட்சி, பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2022ம் ஆண்டு முதல் இத்தலைப்பில் படம் உருவாகி வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சரவணன் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் வழக்கைத் தவிர்க்க தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின்னர் அவர்கள் பின்வாங்கியதால் வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மேல்முறையீட்டு மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.