'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
பாடலாசிரியராக, கதாசிரியராக, இயக்குநராக பின் தயாரிப்பாளராக உயர்ந்து, தமிழ் திரை ரசிகர்களின் உள்ளங்களில் தனி இடம் பிடித்தவர் 'இயக்குநர் திலகம்' கேஎஸ் கோபால கிருஷ்ணன். 1950 களில் “எதிர்பாராதது”, “அமரதீபம்”, “எங்க வீட்டு மகாலக்ஷ்மி”, “உத்தமபுத்திரன்”, “தெய்வப்பிறவி” போன்ற பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ஒரு பாடலாசிரியராக அறியப்பட்டு, அதன்பின் ஒரு கதாசிரியராக உயர்ந்து, 1962ஆம் ஆண்டு வெளிவந்த “சாரதா” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமானார். இதில் எஸ்எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நாயகன், நாயகியாக நடித்தனர்.
முதல் படமே முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட, முட்கள் நிறைந்த பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை தரும் படமாக அமைந்தது. “அம்பிகாபதி”, “திருடாதே”, “மணியோசை” போன்ற படங்களைத் தயாரித்த “ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஏஎல் சீனிவாசன் தயாரித்தார். இந்த திரைப்படத்தின் கதையை, அவர் அவரது நண்பர்களிடம் சொல்லியபோது, இது வேண்டாத விஷப்பரீட்சை என நண்பர்கள் சொல்ல, கதையை எழுதிய கேஎஸ் கோபாலகிருஷ்ணனையே இந்தப் படத்தை இயக்கச் சொல்லவும் இருக்கின்றேன் என ஏஎல் சீனிவாசன் ஆணித்தரமாக கூற, பைத்தியக்காரத்தனமான முடிவு என நண்பர்கள் கூறினர்.
துணிந்து அந்தக் கதையை படமாக எடுத்த ஏஎல் சீனிவாசன், படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில், அதுவரை எடுத்திருந்த படத்தை போட்டுப் பார்த்தபோது, இந்தப் படத்திற்காக முன் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்கள், இந்தப் படம் சம்மந்தமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, கொடுத்த முன் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். இந்தநிலையில், படம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, அதிகப்படியான வசூலை வாரிக் குவித்து, மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது ஏஎல் சீனிவாசனுக்கு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் குத்தகைக்கு எடுத்திருந்த 'மெஜஸ்டிக் ஸ்டூடியோ”வின் பெரையே “சாரதா ஸ்டூடியோ” என பெயர் மாற்றமும் செய்தார் ஏஎல் சீனிவாசன்.